Saturday 7 March 2015

30.11.2014
வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே மழை.
காலையிலும் நசநச.
பையன்கள் இருவருமே பள்ளிக்கு செல்லவில்லை என்றனர்.
மூத்தவன் 12 ஆம் வகுப்பு.
பாடங்கள் நடத்துவார்களே! என்றேன்.
எல்லாம் முடித்துவிட்டார்கள். பரவாயில்லை என்றான்.
சின்னவன் 7 ஆம் வகுப்பு. மகிழ்ச்சி.
எனக்கு ஒரு யோசனை.
சரி,வீட்டில் இருங்கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் பள்ளிக்கு கிளம்பிவிடுவேன். எனக்கு ஒரு உதவி செய்துதர முடியுமா?
ஒத்துக்கொண்டனர்.
ஒன்பதாம் வகுப்பில் உணவே மருந்து என்ற பாடம் நடத்த வேண்டும்.
அதற்கு முன்னால் புகையிலையின் கேடுகள் குறித்த Power point காட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.
மிக விரிவாக வேண்டாம்.
சிகரெட், பாக்குவகைகள், சைனி கைனி போன்றவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், குறிப்பாக வாய்ப்புற்று நோய் குறித்த படங்கள் வேண்டும். என்றேன்.
இருவரும் சேர்ந்து உருவாக்கித்தந்தனர்.
ஆங்கிலத்தில் நோய் குறித்து இருந்த குறிப்புகளுக்கு தமிழில் விளக்கம், பெரியவன் சொல்லிக்கொடுத்தான்.

பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் செய்தித்தொகுப்பை காட்டினேன்.
பயனுள்ளதாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment