Saturday 7 March 2015

29.11.2014
வகுப்பறைக்குள் ஒரு மாணவன் கொல்லப்பட்டான்.
இதுவரை பள்ளிகளில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் மீண்டும் விவாதத்தில்.
வழக்கம் போல,
கல்வியாளர்கள், பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் விவாதிப்பார்கள். ஆசிரியர்கள்...மாணவர்கள்...பெற்றோர்கள்...சினிமா என்று பல்வேறு தரப்பையும் குறைகூறி.....
நீதி போதனை வகுப்புகள் இல்லை என்பது முக்கிய பொருளாக இருக்கும்.
துறைசார்ந்து பல மட்டங்களில் கூட்டங்கள் நடைபெறும்.

நீதிபோதனை வகுப்புகள் தேவைதான்.
ஒரு பாடவேளை மட்டும் நீதிக்கதைகள் சொல்வதால் பயன் கிடைத்துவிடுமா?
பள்ளி,வீடு,சமூகம் என சுற்றுப்புறம் அத்தனையும் ஒரு குழந்தைக்குப்பாடங்களாக அமைய வேண்டாமா?
பள்ளியில் எல்லா பாடவேளைகளும் வெறும் பாடம் நடத்துவதாக மட்டுமே இல்லாமல் ஆசிரியர் மாணவர் உரையாடல்கள் நடைபெறும் களமாக மாறவேண்டும்.
வீடுகளுக்கிடையே சுவர்களை இடிக்கவேண்டும் என்று பாரதிதாசன் சொன்னதுபோல,
வகுப்பறைச்சுவர்களை இடித்து ஆசிரியர்களும் மாணவர்களும் சுதந்திரமாய் வெளிப்படும்போது மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கலாம்.

No comments:

Post a Comment