Saturday 7 March 2015

28.11.2014
நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் சில மாணவர்கள் பரபரப்பாக பள்ளிக்குத்திரும்பி வந்தார்கள்.
சில ஆசிரியர்கள் என்னவென்று விசாரித்தோம்.
தெரு முனையில் மூன்றுபேர் +2 மாணவர் ஒருவரைப்பற்றி விசாரித்தனர். ஏதோ பிரச்சினை. அவனை அடிப்பதற்காக காத்திருக்கின்றனர். என்றனர்.
மேல்நிலை மாணவர்களிடம் விசாரித்தோம்.
காலையிலேயே சிலமாணவர்களிடையே சண்டை என்று முதுகலையாசிரியர்கள் சொன்னார்கள்.
இரண்டு மாணவர்களுக்கிடையே சில நாட்களாகவே சண்டை.
நண்பர்களும் குழுவாக சேர்ந்துகொண்டனர்.
காலையில் ஒருவனை மற்றவர்கள் அடித்துவிட்டனர்.
அவன் எப்படியோ தனது ஊரில் உள்ள நண்பர்களுக்கு தகவல் சொல்லிவிட்டான்.
அவர்களே காத்திருந்தவர்கள்.
சண்டையிட்டுக்கொண்ட இருவரும் பள்ளிக்குள்ளேயே சிறப்பு வகுப்பில் இருந்தனர்.
முதுகலை ஆசிரியர்கள் இருவரையும் விசாரித்தனர்.
அடிபட்டதால் ஊரிலிருந்து ஆட்களை வரவைத்த மாணவன், ஆசிரியர்கள் பேசியபின் வருத்தப்பட்டான். அப்பாவிடம் சொல்லிவிடாதீர்கள், என் படிப்பை நிறுத்திவிடுவார். என்றான்.

அடித்த மாணவனோ தான் செய்தது சரி என்றே சொன்னான்.
அவன் என்னைப்பார்த்து முறைத்தான்.என்று ஏதேதோ காரணங்கள் சொன்னான். பேச்சில் ஓர் அலட்சியம்.
ஆசிரியர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.
அடி வெளுக்கணுங்க!
ஏதாவது காதல் விவகாரமா இருக்கும்!
ட்ரெய்னிங் டீச்சருங்க முன்னாடி ஹீரோ ஆகணும்னு இப்படி!
இதுக்குதான் சொல்றேன், ட்ரெய்னிங்க்கு பொண்ணுகளை அனுமதிக்க வேண்டாம்ன்னு!
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பெண்களே வேண்டாம் என்றவரிடம் கேட்டேன்,
நம் பள்ளியில் ஆசிரியைகளே இல்லையா?
பதிலேதும் சொல்லவில்லை.
மாணவர்கள் விடலைப்பருவத்தில் முன் மாதிரிகள், வழிகாட்டிகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
பெரும்பாலும் திரைக்கதாநாயகர்களே முன்மாதிரிகள்.
இன்றைய படங்கள் வன்முறையையே காட்டுகின்றன.
பள்ளிகளில் மதிப்பெண்கள், கோர்ஸ்,வேலை, சம்பளம் என்பன பற்றியே அதிகம் பேசுகிறோம்.
மனிதம் பேசவும் வாழ்ந்துகாட்டவும் மாதிரிகள் தேவை.
இல்லையெனில் எதிர்வரும் தலைமுறை மனிதத்தன்மையே இல்லாததாக இருக்கும்.

No comments:

Post a Comment