Wednesday 4 March 2015

25.11.2014
பள்ளியில் விளையாட்டுவிழா மற்றும் ஆண்டு விழா.
வேலைகள் அதிகம்.
வழக்கம்போல கலைக்குழுவிலும் பணி.
ஆடுகிறோம், என்று மாணவர்கள் திரைப்படப்பாடல்களோடு கலைக்குழு பொறுப்பாசிரியர்களை தேடி வருவார்கள். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தங்கள் குழுக்களை தயார் செய்வார்கள்.
எங்களுக்குள்ளும் குழுக்கள் உண்டு.
நான் நாட்டுபுற நடனம் ஏதேனும் தயார் செய்வேன்.
இந்த ஆண்டு அழகர் ஆட்டம்.
விழாவுக்கு ஒருசில நாட்களுக்கு முன் முழுமையான ஒத்திகை நடைபெறும்.
இரு தினங்களுக்கு முன்,சனிக்கிழமை ஒத்திகை.
12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பரதம் ஆடினான்.
" மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன......."
எப்போதோ சிறுவயதில் கற்றிருக்கிறான்.ஓரளவு படத்தைப்பார்த்து ஆடுகிறான். தாளம் சரியாக இல்லை.
ஆடி முடிந்ததும் ஒரு ஆசிரியை,
இவன் ஆடுனது பரதமே இல்ல, கூத்தாடுறான். கண்டபடி குதிக்கிறான்.
தாளமே இல்ல. நம்ம ஸ்கூல் தலைவருக்கு நல்லா பரதம் தெரியும்.இப்படி தப்பா ஆடுனா கோபிப்பாரு.
தலைமையாசிரியரும் ஒத்துக்கொண்டார்.
இதை யார் ஏற்பாடு செய்தார்கள்?
அனைவரும் இல்லையென ஒதுங்கிக்கொண்டனர்.
அந்த மாணவனை ஆடச்சொல்லி ஊக்கப்படுத்திய முதுகலையாசிரியர் அப்போது வரவில்லை.
நான் நடப்வற்றை கவனித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு மாணவன் ஆர்வமுடன் தானாகவே கற்றுக்கொண்டு வந்து ஆடியது பொறுக்கவில்லையே என்று கோபம் வந்தது. சண்டை போடாமல் காத்திருந்தேன்.
அவனை குறைசொல்லிய ஆசிரியைதான் முந்தைய ஆண்டுகளில் பரதம் ஏற்பாடு செய்பவர்.ஓரளவு தெரியும்.
ஆனால்,இதுவரை அவர் சொல்லிக்கொடுத்த மாணவர்களும் முழுமையாக பரதம் ஆடியதில்லை.
பொறுமையாக இருந்தேன்.
அந்த ஆசிரியையும் அவரின் தோழியும் இணைந்தே கலை நிகழ்சிகள் தருவார்கள்.
அவர் தோழி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார்.
9 ஆம் வகுப்பு மாணவர்கள்,
இன்றைய தொலைக்காட்சி நடனம் போல கடுமையான அசைவுகளுடன் சிறு சிறு திரைப்படப்பாடல்களுக்கு நடனமாடினர். அதில் இந்திப்பாடல்களும் இருந்தன.
மாலை வீட்டிற்கு வந்தபின் ஹிந்திப்பாடலின் அர்த்தம் பார்த்தேன்.
எண்ணியது சரி. மோசமான வார்த்தைகள்.

ஆண்டு விழாக்களில் கலை நிகழ்சிகளில் ஒரு தரம் வேண்டாமா?
பாடல்களில், நடன அசைவுகளில் கவனம் வைக்கவேண்டும்.
திரைப்படப்பாடல்களை பயன்படுத்தலாம்.அர்த்தம் கவனிக்கப்படவேண்டும்.
நம் பகுதியில் உள்ள கிராமியக்கலைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
வெறும் கேலிக்கூத்தா, ஆண்டுவிழா?
மறுநாளும் பள்ளியில் ஒத்திகை.
கலைக்குழு பொறுப்பாசிரியரிடம் சென்றேன்.
பள்ளியில் கலைநிகழ்ச்சி என்றால் அதில் ஒரு பொறுப்பும் அர்த்தமும் இருக்கவேண்டும். இந்திப்பாடல் நல்ல வார்த்தைகள் உள்ளதாக இல்லை. தடை செய்யுங்கள்.
இந்திதானே, என்றார்.
பள்ளி நிர்வாகக்குழு தலைவருக்கு ஹிந்தி நன்றாகத்தெரியும்.இதுபோன்ற பாடல்கள் அவருக்கும் பிடிக்காது என்றேன்.
தலைமையாசிரியரிடமும் சொன்னேன்.
கலைக்குழு பொறுப்பாசிரியர் கேட்டார்,
உனக்கு என்னதான் வேண்டும்?
இரண்டே கோரிக்கைகள்.
ஒன்று,
இதுவரை நன்கு பரதம் தெரிந்து யாரும் ஆடவில்லை.
மாணவனின் ஆர்வத்தை தடை செய்யக்கூடாது.
பரதம் முதல் நிகழ்ச்சியாக இடம்பெறவேண்டும்.
இரண்டு,
அந்த இந்திப்பாடல் கூடவே கூடாது.
பரதம் இருக்கும். இந்தியை எடுக்க முடியாது, H.M இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
எனக்கு கோபமாக வந்தது.
எனது மாணவர்களை ஆடவிடாமல் நிறுத்திவிடுவேன் என்று சொல்லிப்பார்த்தேன்.
தோற்றுப்போனேன்.
அழகர் ஆட்டமாடும் மாணவர்கள் இந்த ஆண்டோடு 12 ஆம் வகுப்பு முடித்துச்செல்கிறார்கள். எனவே, ஆடவிடாமல் செய்ய
மனம் ஒப்பவில்லை.
Like ·
·

No comments:

Post a Comment