Wednesday 4 March 2015

17.11.2014
ஆசிரியர் தினத்தை மாணவர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
குழந்தைகள் தினத்தை ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தோம்.
மாணவர்கள் அனைவருக்கும் லட்டு வழங்க முடிவு செய்தோம்.
அன்றைய நாள்முழுதும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென பல்வேறு நிகழ்வுகளைத்திட்டமிட்டோம்.
கலைத்திரு. முத்து இலட்சுமண ராவ் குழுவினரின் தோற்பாவைக்கூத்து நிகழ்ச்சியுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. தொடர்ந்து தமிழாசிரியர்கள் பாலா,முத்துக்குமார்,சிவா ஆகியோர் சேர்ந்து கோமாளி வேடமிட்டு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தலாமென முதல்நாள் முடிவு செய்தோம்.
எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தங்கப்பாண்டி குழுவினரின் ஒயிலாட்டம்,தப்பாட்டம்,மற்றும் கட்டைக்கால் ஆட்டம் ஆகியன பிற்பகல் நிகழ்வுகள்.
அவசரமாக அழைப்பிதழ் தயாரானது.
தோற்பாவைக்கூத்து முடிந்ததும் எங்களின்நகைச்சுவை நிகழ்ச்சி. முதுகலை உயிரியல் ஆசிரியர் திரு.ரமணனின் கைவண்ணத்தில் மூவரும் கோமாளிகள் ஆனோம். அப்போதே என்ன செய்யலாம்? என நண்பர்கள் முத்துக்குமாரும் பாலாவும் முடிவு செய்தனர். மருத்துவர், நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது போல் காட்சியை முடிவு செய்தனர்.
வசனங்கள் அவ்வப்போது பேசிக்கொள்ளலாமென முடிவும் செய்தோம். நாங்களும் மகிழ்ச்சியாக இருந்ததால் தொடக்கம் முதல் இறுதிவரை அனைவரும் சிரித்தபடியே இருந்தனர்.
மதியம் சிறப்பான உணவுக்குப்பின் கலை நிகழ்வுகள் தொடர்ந்தன. தங்கப்பாண்டி குழுவினருடன் நானும் பறை வாசித்தேன். ஒயிலாட்டம் முடிந்ததும் பறையாட்டம்.
தங்கப்பாண்டியும் அவர் நண்பரும் ஆடும்போதே என்னையும் அழைத்தபடியே இருந்தனர்.காலை முதலே நிகழ்சிகளில் பங்கு பெற்றிருந்ததால் இசைத்தபடியே முழுமையாக ஆட என்னால் இயலவில்லை. அவ்வப்போது சிறிது ஆடினேன். வயதும் ஒரு தடைதான்.
காலைமுதல் மாலைவரை தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளி வரை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.




No comments:

Post a Comment