Saturday 7 March 2015

04.12.2014
நேற்று காலைமுதலே பரபரப்பு.
12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனைத்தேடி காவல்துறையினர்.
காரணம்,
நண்பர்களுடன் சேர்ந்து மற்றொரு மாணவனைத்தாக்கியது.
முந்தியநாள் மாலையில் வெளியே நடந்த நிகழ்வு.
காரணம்,
பள்ளியில் அவர்கள் ஒரு குழுவாக அடித்ததற்கு பழிக்குப்பழி.

அடிக்கடி மாணவர்களின் சண்டைகள் பற்றிய செய்திகள்.
சண்டையிட்டுக்கொள்வது சாதாரணம்.
ஆனால், இப்போது வன்முறை,வெறி அதிகரித்துள்ளன.
மாணவர்களுக்கான கூட்டம் கூட்டப்பட்டது.
ஏறத்தாழ இரண்டுமணிநேரம் அறிவுரைகள்.
ஆசிரியர்கள் கோபமாக இருக்கிறார்கள்.
இயலாமையும் வெறுப்பும் பேச்சில்.
என்ன செய்வது?
மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில்
மனப்பண்புகளை வளர்க்கத்தவறுகிறோமோ?

No comments:

Post a Comment