Saturday 7 March 2015

03.12.2014
9 ஆம் வகுப்பில் பயிற்சியாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்.ஆங்கிலப்பாடம்.
ஜன்னல் வழியாக கவனித்தேன்.
ஆங்கில இலக்கணம் நடத்திக்கொண்டிருந்தார்.
கையிலிருந்த பிரெய்லி குறிப்புகளை வாசித்தபடியே வாக்கிய வகைகளுக்கு எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு எளிய வாக்கியம் சொன்னதும் அதன் அர்த்தம் யாருக்குதெரியும்?என்று மாணவர்களிடம் கேட்டார்.
கூட்டத்தில் ஒருவன் பதில் சொன்னான்.
அவர், அவன் பெயரைச்சொல்லி,
சரியா சொன்னே, எழுந்திரிச்சு திரும்ப சொல்லு!
மாணவன் எழவில்லை.
அவர் மீண்டும் சொல்லச்சொன்னார்.
அவன் எழுந்து சொன்னான்,
மறந்திருச்சு!
இப்ப தானப்பா சொன்னே?
மறந்திருச்சு.
ம்.ம்.சரி. உட்காரு.
மாணவர்களில் பலர் மேசையில் கவிழ்ந்தபடியே பாடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அதே வகுப்பில் என் பாடவேளை.
சில குறள்களைக்கூறினேன்.
கல்வியில்லாதவரே கண்ணில்லாதவர், ஆங்கில வகுப்பில் கவனித்தேன்.
உங்களில் பலர் கண் இருந்தும் இல்லாதவர்.
ஒரு ஆசிரியர், கண் இல்லாவிட்டாலும் கல்வியால் அதைப்பெற்று உங்களுக்கும் கொடுக்க முயன்றுகொண்டிருக்கிறார்.
' தெரியாது' என்று விளையாட்டாய் பதில் சொன்ன மாணவனிடம்
எப்போதும் வகுப்பில் சொல்லும் வாசகங்களையே அழுத்தமாகச்சொன்னேன்.
"உனது செயல் எனக்கு வருத்தத்தைத்தந்தது,
இன்னமும் உன்னை மனிதனாக மதிக்கிறேன்."

No comments:

Post a Comment