Wednesday 3 December 2014

06.11.2014
வாசிப்பு மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. சற்றே பெரிய வார்த்தைகளைக்கண்டாலே திணறிவிடுகிறார்கள்,மாணவர்கள்.
வாசிப்பவர்களும் தெளிவாக உச்சரிக்காமல் அவசரப்படுகிறார்கள். என்ன செய்யலாம்? என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பாலா சொன்னார்,
" சிவாஜி நடித்த வசனங்களை மாணவர்களுக்கு காட்டி நடிக்கச்சொன்னால் என்ன?"
நல்ல யோசனையாகத்தோன்றியது.
பள்ளி விழாக்களிலும் நாடகம் அருகி சம்பிரதாயமாகிவிட்டது.
கட்டபொம்மன் வசனங்கள் மாறுவேடப்போட்டிக்கு போய்விட்டன.
சிவாஜியின் சிறந்த காட்சிகளைச்சேகரித்தேன்.
கட்டபொம்மன் - ஜாக்சன் சந்திப்பு, கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் காட்சி,
சாக்ரடீஸ்,சேரன் செங்குட்டுவன்,வீர சிவாஜி, அசோகன் போன்ற நாடகங்கள்.
மனோகரா, இராஜராஜ சோழன், திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் வசனங்கள்.
என்று காட்சிகளை சேகரித்தேன்.
பல்வேறு காரணங்களால் பள்ளி ஒலி-ஒளி அறையைப்பயன்படுத்த இயலவில்லை. மடிக்கணினியை எடுத்துச்சென்றேன்.
வகுப்பறையில் மாணவர்கள் படக்காட்சிகளைப்பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
மடிக்கணினி என்பதால் ஒலி போதுமானதாக இல்லை. இருப்பினும் கேட்க முயன்றனர்.எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
ஒருசில காட்சிகளை மட்டும் காட்டிவிட்டு எப்படியேனும் ஓரிரு நாட்களில் ஒலி-ஒளி அறைக்குச்சென்று
படங்களை கண்டிப்பாக பார்ப்போம் என்று மாணவர்களிடம் கூறினேன்.

No comments:

Post a Comment