Saturday 1 November 2014

'கற்க கசடற'


தேர்வு முடிந்ததும் மாணவர்களை அனுப்பிக்கொண்டிருந்தோம்.
எங்கள், இடைநிலை உதவித்தலைமையாசிரியர் அருகே நின்றுகொண்டிருந்தார். மெதுவாக பேச்சுக்கொடுத்தேன்.
என்ன,அன்னைக்கு ஒரே சத்தமா இருந்துச்சு!
நான் பதிலுக்கு சத்தமிட்டது நினைவுக்கு வந்திருக்கலாம். இருந்தாலும் கேட்டதால் மெதுவாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.
ஆமா, இந்த விகடன்ல ஆசிரியரபத்தி தப்பா எழுதிக்கிட்டே இருக்குறான்....
அப்புடியா....எப்போ, நீங்க வாசிச்சீங்களா?
இல்ல, சொன்னாங்க....
அதான பாத்தேன், போன ரெண்டு வாரம் மட்டும்தான் நேரடியா ஆசிரியர்களை எழுதிருக்காங்க,
கொஞ்சம் தப்பு கொஞ்சம் சரி மாதிரி தெரியுது.....
அந்த வேலைநாள் பத்தி ஏதோ ....
அட, ஆமா, அத சொன்னது நம்ம நண்பர்தான்,நான் கொஞ்சம் திருத்தித்தர்றேன்னு சொன்னேன், அவசரப்பட்டு எழுதிட்டாங்க.(சும்மா ரீல்)..மேலும் தொடர்ந்தேன்.
ஆசிரியர்களின் விடுமுறைகள் பற்றிய புலம்பல்கள் அதிகப்பிரசங்கம். ஆனா, கற்றல் கற்பித்தல் நாட்கள் பற்றிய கணக்கு.......
ஒவ்வொரு பள்ளிக்கும் வேலை நாள் மாறுது சார்,
அவன் எழுதுனது தப்பு.
9 ஆம் வகுப்பு வரைக்கும் நிறைய நாட்கள் கற்றல் கற்பித்தல் நாள்.
10 ஆம் வகுப்புக்கு அவுங்க சில தேர்வுகள் நடக்குற நாட்களை கழிச்சிருக்காங்க.ஆனா இடைப்பருவத்தேர்வுகள் ,மூன்று திருப்புதல் தேர்வுகள் நடக்குற நாளெல்லாம் கழிச்சா இன்னும் குறையும்.
12 ஆம் வகுப்புக்கு செய்முறைத்தேர்வு நாட்களையும் சேத்துக்கலாம்.அதுக்கு அப்புறம் அவன் பள்ளிக்கே வரமாட்டான்.....
11 ஆம் வகுப்பு தாமதமா தொடங்கி சீக்கிரமா முடிஞ்சிடும்.
இப்போ சொல்லுங்க....கூட்டிக்கழிச்சுப்பாத்தா
கணக்கு எப்புடி!
நீங்க,விகடனுக்கு என்ன பதில் எழுதப்போறீங்க?
டேய்...ஒழுங்கா வரிசையா போ......
உதவித்தலைமையாசிரியர் மெதுவாக நகர்ந்தார்.
எங்கள் இடைநிலை உதவித்தலைமையாசிரியர் விளையாட்டாய் பேசினாலும் விகடனின் 'கற்க கசடற' நமக்கு சிலவற்றை முன்னெச்சரிக்கை செய்கிறது.
அரசுக்கும் மக்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்யவேண்டியதும்
விகடனின் கடமை.

No comments:

Post a Comment