Monday 3 November 2014


நான் மாணவனாக இருந்தபோது,
எனது ஆசிரியர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கனவு கண்டேனோ,
அப்படியொரு ஆசிரியராக வேண்டும் என்றே தினமும் முயல்கிறேன்.
" நான் சொல்வதை நீ கேளு!"
அவ்வப்போது தோன்றினாலும் அது சரியா? என்று சொல்லும் முன்போ, பின்னரோ யோசிக்கிறேன்.
வகுப்பறை, சிறைச்சாலை அல்ல.
அமைதியான வகுப்பறையை அதிகம் விரும்புவதில்லை.
அதற்காகவே உரையாடல்களை உருவாக்குகிறேன்.
வகுப்பறை கடந்த வெளியே மனதுக்கு மேலும் நெருக்கமானது.
எப்போதெல்லாம் வகுப்பறையை விட்டு வெளியேற முடியுமோ அப்போதெல்லாம் வகுப்பும்,
சுதந்திர வெளியில் உயிர்ப்புள்ளதாகிறது.
மரங்கள் நிறைந்த பள்ளியில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
பள்ளிக்குள் இருக்கும் மரங்களே, போதி மரங்கள்.

No comments:

Post a Comment