Saturday 1 November 2014

பெரியார்

வழக்கம் போல் பாடம் முடிந்தபின் கடைசி 15 நிமிடங்கள், இன்று யாருடைய பிறந்தநாள் என்று கேட்டேன். அதுவரை அமைதியாக இருந்த மாணவர்கள் மகிழ்ச்சியானார்கள்.
சிலர் கத்தினர்,"பெரியார்"
முழு பேரு?
ஒருவன் சொன்னான்,"பெரியார்.ஈ.வெ .ராமசாமி".
யாரு அவரு?
நீங்க சொல்லுங்க!
வழக்கம்போல் தொடங்கினேன்.
ஒரு தலைவர் என்ன செய்தார் என்று பார்க்கணும்னா, அவர் இல்லாம போயிருந்தா என்ன ஆயிருக்கும் அப்படின்னு பாத்தாலே போதும்.
பெரியார் இல்லேன்னா.... இப்படி நாம எல்லோரும் ஒன்றாக வகுப்புல இருந்திருக்க முடியாது.
சிலர் படிக்க, சிலர் ஆடு மாடு மேய்க்க,ஆளுக்கொரு வேலை பார்த்துக்கிட்டு இருந்திருப்போம்.
என்று தொடங்கி சில செய்திகளைச்சொன்னேன்.
சிறிது நேரம் கழிந்ததும் சிலர் பேச ஆரம்பித்தனர்.சிறு குசும்புகள்.
பின் வரிசையில் கவனம் சிதற ஆரம்பித்தது.
எனது பேச்சை நிறுத்திவிட்டேன்.
மீண்டும் சொன்னேன்,
"பெரியார் இல்லையென்றால் நீங்கள் இப்படி இருந்திருக்க முடியாது".
சிலர் கவனிக்காமல் சிரித்துக்கொண்டிருந்தனர்.
நான் சொல்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.
ஒரு சிலர், "ஐயா,சொல்லுங்கள்" என்றனர்.
"எல்லாம் சொல்லிவிட்டேன்". அமைதியானேன்.

No comments:

Post a Comment