Monday 3 November 2014

தோடுடைய செவியன்


சக ஆசிரிய நண்பர் கடுமையான கோபமாகப்பேசிக்கொண்டிருந்தார். ஓர் மாணவன் தலை குனிந்து நின்றுகொண்டிருந்தான்.
"இதென்ன, ரவுடி மாதிரி !,
உன் தலையும் ஆளும்.....!"
நண்பரின் கோபம் அதிகமானது.
மாணவன் பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தான்.
என்னவென்று கேட்டேன்.
ஒரு காதில் தோடு போட்டுக்கொண்டு பள்ளிக்குள் வந்ததாக கூறினார்.
பெரும்பாலும் இளம்பருவத்தில் இதுபோல் 'அடையாளச்சிக்கலில்'
தவிக்கிறார்கள்.
என்ன செய்யலாம்?



வளரிளம்பருவத்து அடையாளச்சிக்கலை கடந்துதான் நாமும் வந்திருப்போம்.
'நான் பெரியவனாகிவிட்டேன் மற்றவர்களிலிருந்து நான் வித்தியாசமானவன் ' என்பதை உலகுக்குச்சொல்ல ஒரு சிறுவனுக்கு வழிகள் எப்படித்தெரியும்?
பெரும்பாலும் சினிமா காட்டும் பாதையில் தான் இன்றைய இளைஞன் நடக்கிறான்.
நடை,உடை,பேச்சு,முடி என மாற்ற முடிந்ததையெல்லாம் மாற்றுகிறான்.
வீட்டிலிருந்தும் அந்நியனாகிவிடுகிறான்.
சரியான வழியை ,சொல்லிலும் செயலிலும் காட்டுவது யார் ?எப்படி?

எனது மாணவர்களிடம் பேசும்போது சினிமாவில் இருந்தே உதாரணங்கள் சொல்லுவேன்.
சிவப்பா அழகா இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும்.
ஆனா, கறுப்பா சரியா தமிழ் பேசத்தெரியாமல் கதாநாயகனாக ரஜினிகாந்த் வரக்காரணம் அவரோட 'நடை'-style- அது யாரையும் போலச்செய்வது அல்ல, தனித்தன்மையானது. அவர் பெரிய நடிகராயிட்டார் அப்படின்னு அவர் மாதிரியே நாம் எவ்வளவு நல்லா செய்தாலும்,
'அப்படியே ரஜினி மாதிரியே இருக்கு!'
என்று அந்தப்புகழும் அவருக்கே போகும்.
ரஜினியைப்போன்ற முக ஒப்புமை கொண்டவர்கள் நடிக்க வந்தார்கள், காணாமல் போணார்கள்.
ஆனால், கறுப்பாகவும் அழகில்லை என்றாலும் திறமைமிக்க பலர் இப்போது திரைத்துறையில் உள்ளனர்.

No comments:

Post a Comment