Saturday 1 November 2014

நம் வகுப்பறைக்குள் நாமே ராஜா.


புத்தகங்கள் மாறுகின்றன.
கல்விமுறைகள் மாற்றப்படுகின்றன.
என்ன செய்யவேண்டுமென தெளிவாகச்சொல்ல ஆளில்லை.
ஏன் செய்யவில்லை? என்று கேட்க ஆயிரம் பேர்.
ஒரு முறையை செய்து பார்த்து விளைவைக்காணும் முன்பே
மாற்று முறை.
மாணவரைவிடக்குழம்பிய நிலையில் ஆசிரியர்கள்.
காகிதத்தில் சதவீதம் கேட்கும் அதிகாரிகள்.

எல்லாம் சரி.
கோபமும் குழப்பமும் செல்லுமிடம் குழந்தைகள் தானே!

உயிர்த்துடிப்புடன் ஆர்வத்துடன் வலம் வரும் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லித்தருகிறோம்?
பாடப்புத்தகங்கள்,பாடத்திட்டங்கள் அவ்வப்போது குழப்புவதால் அவற்றின்மீது பழிபோட்டு சுலபமாக சிலர் தப்பிவிடலாம்.
ஒரு ரூபாய்க்கு வாங்கினாலும்
தரம் பார்த்துப்பொருள் வாங்கும் நான்,
வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற அளவு பணி செய்கிறேனா?
என்ற சுய பரிசோதனையே அவசியம்.

மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் அரசுப்பள்ளிகள்
சாதிக்கும்போது அனைத்து அரசுப்பள்ளிகளும் சாதிக்கத்தடையாக இருப்பவற்றை கண்டறிந்து நீக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ஆசிரியை,
நம் பிள்ளைக்கு ஒழுங்காகச்சொல்லித்தருகிறாரா?
என்று எவ்வளவு கவனிக்கிறோம்.
நம்மை நாம்தான் சுயபரிசோதனை வேண்டும்.

காதிதத்தில் கேட்போருக்கு அதைக்கொடுப்போம்.
கனவுகளுடன் வரும் குழந்தைகளுக்கு
கனவுகள் வளர்ப்போம்.
நம் வகுப்பறைக்குள் நாமே ராஜா.

No comments:

Post a Comment