Monday 3 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 9 - அமைதி.


நவராத்திரியை முன்னிட்டு நவரசங்கள்- ஒன்பது உணர்ச்சிகள், ஆசிரியருக்குப்பயன்படுபவை என்று மனதில் தோன்றியதை எழுதலாம் என இத்தொடரைத்தொடங்கினேன்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
(தொல்காப்பியம், மெய் 3)
என்று எட்டு மெய்ப்பாடுகளுடன் தொல்காப்பியர் நின்றுவிட்டார். நவரசம் என்று பலரும் பல்வேறு சுவைகளைச்சொல்கின்றனர். குழப்பம் வேண்டாம் என்று நான் தொல்காப்பியரைப்பின்பற்றினேன்.
ஒன்பதாவது சுவையாக பெரும்பாலானோர் சொல்வது ' அமைதி'.
எண்வகை மெய்ப்பாடுகளும் இல்லாநிலை என்பதால் தனியே தொல்காப்பியர் கூறாது விடுத்தார் என்றும் கொள்ளலாம்.
அமைதி.
பிறரின் கவனத்தை தன்மீது திருப்ப வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகிறோம் என்று மனோதத்துவம் கூறும். அதில் முக்கியமான ஒன்று ' Kiss me or Kick me'
எனும் விளையாட்டு. குழந்தைகள் நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காவே சேட்டைகளைச்செய்கின்றார்கள்.
ஆசிரியர், கோபப்படாமல் முகத்தில் அமைதியைக்காட்டி அன்பாக எடுத்துக்கூறும்போது மனமாற்றம் மாணவரிடையே சாத்தியமாகும்.
உணர்வுகளைக்கடந்த அமைதி புத்தநிலை.
அன்பின் முழுமை.

No comments:

Post a Comment