Saturday 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 6 - வெகுளி.


ஆசிரியர் வெகுளியுடன் இருக்கவேண்டும்.
மனிதன், சிந்திக்கத்தெரிந்தவன், ஆறாம் அறிவு உண்டு.
நல்லது கெட்டது எனப்பகுத்தறியும் பண்புடையவன்.
நம்மைவிடக்குறைவான அறிவு படைத்த உயிரினங்கள் எல்லாமே தக்க நேரம் வரும்போது வெகுளி பெருக்குகின்றன.
ஆசிரியர்கள்?
கற்ற கல்வி, சிந்தனையைத்தூண்டியதால் அமைதி காக்கிறோமா?
சமூகத்தில் அன்றாடம் சாதாரணமாக நிகழும் கேடுகள் குறித்து தார்மீக வெகுளி கொண்டு எதிர்வினையாற்றியிருக்கிறோமா?
சமூகக்கேடுகள் குறித்து நாம் வெகுளி பெருக்கி,
மாணவருக்கும் சொல்லித்தரவேண்டும்.
கதைகள், உணர்வுப்பூர்வமான கதைகள் பிஞ்சு மனங்களில் பதிக்கப்படவேண்டும்.
சமூகத்தின் தவறுகள் மேல் எழும் நமது வெகுளி மாணவருக்கும் மாற்றப்படும்போது புதிய தலைமுறை உதயமாகும்.

"அந்தப்பையன் கள்ளங்கபடம் இல்லாதவன்,வெகுளி!"
என்ற ஒரே பொருளிலேயே 'வெகுளி' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
வெகுளியின் நேரடியான பொருள் -கோபம்.
ரௌத்திரம் பழகு.

No comments:

Post a Comment