Saturday 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 4 - மருட்கை.


உறவினர் வீடுகளுக்குச்செல்கிறோம். குழந்தைகள் இருந்தால் என்ன செய்வார்கள்?
நன்கு பழகவில்லை என்றாலும் நாம் சிரித்த முகத்துடன் அணுகினால்
நெருங்குவார்கள்.
அடுத்து....
அவர்களின் பொக்கிஷங்களை எடுத்துவந்து காட்டத்தொடங்குவார்கள்.
பொம்மை, சிறு பொருட்கள்,வரைந்த படங்கள்....
முதல் பொருளைக்காட்டும்போதே நம் சிரிப்புடன் சிறிது வியப்பையும் கலந்து ஆச்சரியத்துடன் பார்த்தோம் என்றால் அடுத்த பொருட்கள் தொடரும்.
இன்னும் ரகசியமாக அவர்கள் சேர்த்துவைத்திருக்கும் மூடிகள்,ரப்பர்,
மயிலிறகு என்று குழந்தைகளின் உண்மையான பொக்கிஷ உலகுக்குள் நாமும் நுழைத்து வியந்து, குழந்தையாகலாம்.
பள்ளியிலும் மாணவர்கள் தமது படைப்புகளுக்கு இதைத்தான் ஆசிரியரிடம் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், சிலர் திருத்தத்தொடங்கிவிடுகிறோம்.

புன்னகையுடன் அவ்வப்போது சேரும் ஆச்சரியமே அதை பொன்னகை ஆக்கும்.
சிரிப்பின்மேல் சிறிது மருட்கை தூவி மாணவரின்
படைப்புகளை அணுகுவோம்.
உள்ளத்தில் இடம் பிடிப்போம்.

No comments:

Post a Comment