Friday 31 October 2014

என் சுவாசக்காற்று.

வண்ணங்கள் குழைத்து
வடிவாயொரு ஓவியம் செய்கையில்
உயிர்வளி ஊதி ஊதி
உடல் சோர்ந்த வேளையில்
உள்ளம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
வார்த்தைகள் கோர்த்து
எண்ணம் இறக்கும் எத்தனிப்பின்
இறுதி எதுவானாலும்
இதயம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
சும்மாஇருந்து மனம் வாடும் வேளைகளில்
தேடிச்சோறு நிதந்தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசும்
வேடிக்கை மனிதனல்ல நீயென
உயிர்த்துளிதரும் என் சுவாசக்காற்று.
என்னுடனே இருந்துவிடு என்பேன்,
பதிலேதும் சொல்லாமல்
ஒற்றைச்சிரிப்பை உதிர்த்தோடிவிடும்
எனக்கான என் சுவாசக்காற்று.

No comments:

Post a Comment