Friday 31 October 2014

திருமணங்கள் சொர்க்கம்.


ஆவணி பல்வேறு பத்திரிக்கைகளுடனேயே வருகிறது.
இன்றைய மணவிழாக்கள் ஆடம்பரத்தின் வெளிப்பாடு என்ற நிலை மாறி குடும்பங்களின் பெருமையாகியிருக்கின்றன.
லட்சங்களைச்செலவழித்து லட்சங்களைச்சம்பாதிக்கிறார்கள்.கணக்கு வைத்து மீண்டும் செய்ய வேண்டும்.
மொய் குறித்து விரிவாக தனியே பேசலாம்.
மொய் செய்து, வந்ததா என்று குறிப்பேடுகளை புரட்டிப்புரட்டி....
சரி.
மணவிழாவைப்பார்ப்போம்.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் வாடகையில் மண்டபம்.
வசதிக்கேற்ற வரவேற்பு. அதீத அலங்காரங்கள்.
டெசிபல் பற்றிக்கவலைப்படாத கச்சேரி. உறவினர்,நண்பர்களுக்குள் பேசிக்கொள்ள முடியாமல் எல்லாம் சைகைமயம்.
வீணாவதைப்பற்றிச்சிறிதும் கவலையின்றி வாழையிலை நிறைக்கும் உணவு வகைகள்.
ஒவ்வொன்றையுமே தனித்தனியே விவாதிக்கலாம்.

ஏன், இவ்வளவு வீண்?
கோவிலில் திருமணம்.
மண்டபம்,உணவு,என்று எவ்வளவு செலவு செய்ய நினைக்கிறோமோ அவ்வளவு தொகைக்கு நம் ஊர் பள்ளிக்கு ஓர் அறையே மணமக்கள் பெயரில் கட்டிக்கொடுத்துவிடலாமே!
சிலர் செய்யும் செலவுகளைப்பார்த்தால் பள்ளிக்கூடமே கட்டலாம்.

No comments:

Post a Comment