Friday 31 October 2014

லியோ டால்ஸ்டாய் - சொற்களின் பிரம்மா.


டால்ஸ்டாய் பிறந்தநாள்.
9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் டால்ஸ்டாயின் படைப்புகள். சிறப்புகள், The Last Station திரைப்படத்தின் கதை ஆகியவற்றை சொன்னேன்.
மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

டால்ஸ்டாயின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது 'அன்னா கரீனினா'.
அன்னாவை நானாகவே உணர்வேன். ஒருமுறைக்குமேல் படிக்கவேயில்லை. ஒரே முறையில் உள்ளம் ஒன்றி உணர்வுடன் கந்து வாசித்திருக்கிறேன். இரு வேறு திரைப்படப்பிரதிகள் இருந்தும் பார்க்க இயலவில்லை. அன்னாவை நானாக உணர்கிறேன். அன்னா ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவள்.அவர்களின் தவறுகளை அவளின் தவறுகளாக எண்ணி தண்டனையை தனக்குத்தானே கொடுத்துக்கொள்பவள். அவளின் இறப்பை என்னால் மீண்டும் வாசிக்கவோ பார்க்கவோ இயலாது.அன்னாவை நானாகவே உணர்கிறேன்.

டால்ஸ்டாய் உணர்வுகளை சொற்களில் வடித்த  பிரம்மன்.

No comments:

Post a Comment