Friday 31 October 2014

கேன்வாஸ்- ஓவியப்பயிற்சி வகுப்பு.


காலாண்டுத்தேர்வு  விடுமுறை அற்புதமானது.
வெளியே எங்கும் செல்லவில்லை.
மனம் இல்லை. இயலவும் இல்லை.
பல்வேறு சிந்தனைகள். குழப்பம்.
வாசிப்பு-காமிக்ஸ் மட்டுமே.
நாள்தோறும் நீண்ட பகல் தூக்கம்.
எனது தொடர்ந்த செயல்பாடுகளில் இருந்து விலகி நின்று மெதுவான,தீர்க்கமான அசைபோடல்.

கேன்வாஸ்- ஓவியப்பயிற்சி வகுப்பு.
பத்து ஆண்டுகளைக்கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த ஞாயிறு, வகுப்பிற்கு வந்திருந்தவர்களோடு சிறிது கலந்துரையாடினேன்.
ஓவியர்கள்,ஓவிய ஆர்வலர்கள் தங்களுக்குள் சமகால ஓவியம் குறித்து கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளும் களமாகவே 'கேன்வாஸ்' தொடங்கப்பெற்றது.
கால ஓட்டத்தில் மதுரை ஓவியர்கள், கலை குறித்த விவாதங்களிலும் ஓவிய முயற்சிகளிலும் ஆர்வம் காட்டாததால் மெதுவாக ஓவியம் கற்றுத்தரும் வகுப்பாக மாற்றம் பெற்றது.
வருங்காலத்தலைமுறையினர் மரபான பயிற்சி இல்லாமல் இயல்பாக,மகிழ்ச்சியாக கலையை புரிந்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து ஓவிய வகுப்புகள் நடத்தப்பெற்றன.
ஆனால்,கால ஓட்டத்தில் உடனிருந்த ஓவிய நண்பர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்கு வர இயலாத சூழல் உருவானது.
வகுப்பும் மரபான முறையில் ஓவியம் வரையக்கற்றுத்தரும் வகுப்பாக மாறிவந்தது.
' இது நமது வேலை இல்லையே?'
என்று மனம் தீவிரமாக எண்ணத்தொடங்கியது.
எனவே,
ஒருவாரம் விட்டு ஒரு வாரம் என்று தொடர்ச்சியாக ஓவியப்பயிற்சி நடத்துவதை நிறுத்திக்கொள்வது என முடிவு செய்தேன்.
அனைவரும் ஒத்துக்கொண்டனர்.
பதிலாக,
ஓவியக்காட்சிகள் நடத்துவது, செய்முறை விளக்கங்கள் என்று கலை சார்ந்த நிகழ்வுகளாக அவ்வப்போது நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்தோம்.
மனம் லேசானது.

No comments:

Post a Comment