Friday 31 October 2014

கஞ்சனூர் - சுக்கிரன் அருள் தரும் தலம்.


சுக்கிரன் அருள் தரும் கஞ்சனூர் என்ற கோவிலுக்கு இரவு நெருங்கும் நேரத்தில் நண்பர்களுடன் சென்றேன்.
அந்தக்கோவில் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு தூரத்தில் ஒரு கோவில் நம்ம மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டேன்.
நண்பர்கள், ஆதீனம் மற்றும் நித்தியானந்தா குறித்தும் சில செய்திகளை கேட்டனர். ஊர் அறிந்த செய்திகள்.
கோவிலுக்கு வெளியே வந்தபின் வாகனத்தில் ஏறும்போது ஒரு தேநீர்க்கடை அருகே புதர் போலத்தோன்றியது.
தேர் போலத்தெரிகிறதே! என்று அருகே சென்று பார்த்தேன்.
தேரே தான்.
மரத்தேர்.
நன்கு சிதைந்துவிட்டது. சிற்பங்கள் ஆங்காங்கே தெரிகின்றன.
கிராமம் என்பதால் அப்படியே இருக்கிறது.
ஒரு அற்புதமான கலைச்செல்வம் சிதைந்து கிடக்கிறது என்ற உணர்வே இல்லாமல்......
ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கே வந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள்,
சுக்கிரன் அருள் வேண்டி.





No comments:

Post a Comment