Friday 31 October 2014

ஆசிரியர் தினம் - 'ஆயிஷா'


எந்த ஆண்டுமில்லாத மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு ஆசிரியர் தினம் எங்கள் பள்ளியில் கொண்டாப்பட்டது.
ஒரு சில வகுப்புகளில் தொடங்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு வகுப்பாகப்பரவ, மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் பணத்தைச்சேர்த்து கேக்,குளிர்பானம், மிட்டாய், வண்ணத்தாள்களை வெடிக்க,நுரை பீய்ச்ச என்று பல்வேறு பொருட்களை வாங்க வெளியேயும் செல்ல ஆரம்பித்தனர்.
கூச்சலும் கொண்டாட்டமுமாக கண்ணில் பட்ட அனைத்து ஆசிரிய ஆசிரியைகளையும் தங்கள் வகுப்பறைகளுக்கு அழைத்தனர்.
மேலே நுரை பீய்ச்சினர். கேக் வெட்டி,வண்ணத்தாள் வெடித்து,
கத்தி .....ஆனந்தக்கூத்து.
ஆசிரியர்கள் அறைக்கு கேக் கொண்டுவந்த வண்ணமிருந்தனர், மாணவர்கள்.

10 ஆம் வகுப்பு மாணவனொருவன்,
தனது வகுப்பு நண்பர்கள் ஆசிரியர் தினக்கொண்டாட்டங்களுக்கு பங்குப்பணம் கேட்டபோது தரமறுத்து,
" ஆசிரியர் தினத்துக்கு நாம எல்லோரும் காசு சேத்து அவுங்களுக்கு மரியாதை செய்யுறோம்.குழந்தைகள் தினத்துக்கு அவுங்க நமக்கு என்ன செய்றாங்க?"
என்று கேட்டதாக ஆசிரிய நண்பர் ஒருவர் கூறினார்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த மாணவனுக்கு திங்கட்கிழமை ஒரு 'ஆயிஷா' பரிசளித்துவிடவேண்டும்.

No comments:

Post a Comment