Friday 31 October 2014

கத கேளு! கத கேளு! - விளைவு


நேற்று எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. மாணவர்கள் பல்வேறு படைப்புகளை வைத்திருந்தனர்.
ஒவ்வொன்றாகப்பார்த்துக்கொண்டே சென்றேன்.
( அறிவியல் கண்காட்சிகளைப்பற்றி விரிவாக எழுதவேண்டும்)
6 ஆம் வகுப்பு மாணவனொருவன் எனது சட்டையைப்பிடித்து இழுத்தான்.
என்ன?
பாக்காமப்போறீங்க !?
கவனக்குறைவாக அவனைத்தாண்டிச்சென்றிருக்கிறேன்.
அடடா...! சரி. சொல்லு.
சட்டையைப்பிடித்தபடியே விளக்கினான்.

சில வாரங்கள் முன்பு வரை மதிய வேளையில் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள குழாய்களை மேனிலைப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எனக்கான பணி. பெரிய மாணவர்களுக்குத்தனியே குழாய்கள் உண்டு.
தொடக்கப்பள்ளிச்சிறுவர், சிறுமியர் நீரை வீணாக்காமல் கவனித்துக்கொள்வேன்.
ஏய்! ஓட்டப்பல்லு, தண்ணிய வீணாக்காத!
அந்தத்துடுக்கான சிறுமி சிரித்தபடி ஓடிவிடுவாள்.
தற்போது சத்துணவுப்பகுதியில் மதிய வேளைகளில் பணி.
இன்று,
மதிய உணவு இடைவேளை.
உதவித்தலைமை ஆசிரியர் அழைத்ததால் சென்றேன்.
தொடக்கப்பள்ளி குழாய்ப்பகுதியில் நின்றிருந்தார்.
சிறுவர், சிறுமியர் நின்றிருந்தனர்.
வழக்கம்போலச்சொன்னேன்.
ஏய்! ஓட்டப்பல்லு, தண்ணிய வீணாக்காத!
அந்தச்சிறுமியும் அவள் தோழியும் சிரித்துக்கொண்டே அருகே வந்தனர்.
ஓட்டப்பல்லு, என் கையில் இரண்டு அடி அடித்தாள், இலவச இணைப்பாக ஒரு கிள்ளும்.
....நரீ .....வலிக்குதா?
சிரித்தபடி ஓடிவிட்டார்கள்.
ஆச்சரியமாகப்பார்த்துகொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,
சார,அடிக்கிற... என்றான்,
நான் சிரிப்பதைப்பார்த்துக்குழம்பியபடியே சென்றான்.
பாரதிதாசனின் வரிகள்தான் என் நினைவுக்கு வந்தன,
வீடுகளுக்கு இடையே மட்டுமல்ல,
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே இடிக்கப்படவேண்டிய சுவர்கள் மட்டுமல்ல
கோட்டைகளே இருக்கின்றன.

No comments:

Post a Comment