Friday 31 October 2014

அறம்.


ஒருநாள் மாலை பள்ளி முடிந்தபின் பள்ளிச்செயலருடன் சில ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்தோம். பழம்பெருமை வாய்ந்த மதுரைக்கல்லூரி வாரியத்தின் வரலாறுபற்றி தானக்குத்தெரிந்த செய்திகளைச்சொல்லிக்கொண்டிருந்தார்.

மகாகவி பாரதி பணியாற்றிய சேதுபதி மேனிலைப்பள்ளியில் ராமண்ணா கூடம் என்ற பெரிய கூடம் உள்ளது.
திரு.ராமண்ணா மதுரையில் புகழ்பெற்ற தொழிலதிபர்.பள்ளிக்கு ஒரு கூடம் கட்டித்தருகிறேன் என்று வாக்களித்திருக்கிறார்.
காலப்போக்கில் தொழிலில் நசிவு ஏற்பட்டு வீடு மட்டுமே எஞ்சியிருக்கிறது.கொடுத்த வாக்கைக்காக்க வேண்டுமே என்பதற்காக தனது வீட்டை விற்று பள்ளியில் கூடம் கட்டித்தந்து அன்றைய தமிழக ஆளுநரை வைத்து திறப்பு விழா நடத்தியபின் ஊரைவிட்டுச்சென்றுவிட்டார்.
சென்ற ஆண்டு சேதுபதி பள்ளிக்கு 125 ஆவது ஆண்டுவிழா. ஒருநாள் பள்ளிக்கு வந்த ஒரு பெண்மணி, தாம் மறைந்த திரு ராமண்ணா அவர்களின் பெயர்த்தி எனவும் இப்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்.எங்கள் தாத்தா இறக்கும்போது ஒரு உயில் எழுதி வைத்திருந்தார். அதில், மதுரை சேதுபதி பள்ளியில் தாம் ஒரு கூடம் கட்டித்தந்திருப்பதாகவும் அதன் மராமத்துப்பணிகளை தமது சந்ததிகளே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஏதேனும் பணிகள் இருந்தால் கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தச்செய்தி கேட்டவுடன் அனைவரின் கண்களும் கலங்கின.
அறம் இன்னுமிருக்கிறது.


(ராமண்ணா கூடம்....பழைய படம்.இன்று புதுப்பொலிவுடன் இருக்கிறது.)

No comments:

Post a Comment