Sunday 10 August 2014

பொட்டி வந்தாச்சு!



9 ஆம் வகுப்பு மாணவர்கள் முற்றிலுமாக வாசிப்பின் மாயத்திற்கு வசப்பட்டுவிட்டார்கள்.
வகுப்பிற்கு எப்போதும் பெட்டியுடனே செல்வேன். பெட்டி நிறையப்புத்தகங்கள்.
உள்ளே நுழைந்ததும் பெட்டியை வாங்கி புத்தகங்களை வரிசையாக வைத்துவிடுவார்கள்.
ஒரு புத்தகத்தை எடுக்கும்போது குறிப்பேட்டில் குறித்து வைத்துவிடவேண்டும்.
வாசித்துமுடித்தபின் சிறு விமர்சனம் அல்லது குறிப்புடன் வேறு புத்தகம் எடுத்துக்கொள்ளலாம்.
இவற்றில் பெரும்பாலானவை இப்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள்.
காமிக்ஸ், குட்டி இளவரசன்,ஆயிஷா, தெனாலிராமன், சூபி கதைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் எனப்பல்வேறுவகையான புத்தகங்கள் இருக்கின்றன.
இதே பெட்டி முற்றிலும் காமிக்ஸ் புத்தகங்களுடன் 6 ஆம் வகுப்பிற்கும் செல்கிறது.

No comments:

Post a Comment