Sunday 10 August 2014

ஓவியக்காட்சி.


திருவனந்தபுரத்தில் 6ஆம் தேதிமுதல் 14 ஆம் தேதி வரை
ஓவியக்காட்சி.

நண்பர் மணிலால் Anokhii என்ற அமைப்பு மூலம் ஓவியக்காட்சிகளை நடத்திவருகிறார். திருவனந்தபுரம், கலாச்சார வளாகத்திலுள்ள கேரள லலித்கலா அகாடமி அரங்கில் கண்காட்சி நடைபெறுகிறது.
இரு ஓவியங்களுடன் சென்றிருந்தேன்.புனே, மும்பை,துபாய்,
ஹைதராபாத் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓவியர்கள் வந்திருந்தனர்.
6 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.பி.அனில் குமார் கண்காட்சியைத்திறந்துவைக்க வருவார் என்றார்கள்.
ஓவியர்கள், பார்வையாளர்கள்,சில பத்திரிகையாளர்கள் லலித்கலா அகாடமி செயலர் அனைவரும் தயாராக இருக்க சரியாக 5 மணிக்கு ஒரு கார் மட்டுமே வந்தது.ஒருவர் மட்டுமே வந்தார். அமைச்சர் என்றார்கள். சுற்றிப்பார்த்தார்.ஓவியர்களை விசாரித்தார். பேசினார்.
கிளம்பிவிட்டார். அனைவருமே ஓவியம் பற்றியே பேசினார்கள்.
இரவுணவு நண்பர் சதீசனுடன்.
அங்கேயே தங்கியிருந்தேன்.நள்ளிரவுவரை அனைவரும் பேசிக்கொண்டிருந்தது சுகமான அனுபவம். கேரளாவின் கன்னூரிலிருந்து பல ஓவியர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் என்மேல் அளவு கடந்த அன்பு, நான் தமிழன் என்பதால்.
மூத்த ஓவியர் கே.கே.ஆர் .,மலையாளத்தில் நீண்டநேரம் பேசிக்கொண்டே இருந்தார்.
"திருவள்ளுவர், மானுடம் பாடியவர், அந்தக்காலத்தில் அவ்வளவு அற்புதமான சிந்தனைகளைத்தந்தது தமிழ் மட்டுமே. அன்று முதல் அண்ணாதுரை வரை பரவாயில்லை. அதன் பின் தமிழரின் சிந்தனை வளர்ச்சியில் சற்றே சரிவுதான்"
தி,ஜ.ரா வின் மோகமுள், சித்திரப்பாவை, இளையராஜா, தெய்யம் நாட்டியம், திரைக்கு வந்த மரபுப்பாடல்கள் என்று அவரின் விரிவான பேச்சில் மயங்கியிருந்தேன்.
கன்னூர் ஓவியர்கள் பலர் எனக்கு இளையராஜாவின் பாடல்களைப்பாடிக்காட்டிக்கொண்டே இருந்தனர். மலையாளக்கட்டைக்குரலில் கொஞ்சுதமிழ் வார்த்தைகள் தாலாட்டின.

No comments:

Post a Comment