Sunday 10 August 2014

வர்க்கலா - கேரளாவில் மலைமுகடும் கடலும் சந்திக்கும் சுற்றுலாத்தலம்.
இயற்கை மட்டுமே இருக்கிறது.
பாரம்பரிய வடிவமைப்பில் தங்குமிடங்கள்.
இனிமையான உபசரிப்பு.
ஆயுர்வேதம்,கிழி,பிழிச்சில்.
சமையல் வகுப்பு.
யோகா வகுப்பு.
திறந்தவெளிக்கழிப்பறை.
நீர் விளையாட்டுகள்.
கடல் உணவுகள். படகு வீடு......
நம்மையறியாமலேயே செலவு செய்கிறோம்.
உலகெங்கிலுமிருந்து வந்து செலவு செய்கிறார்கள்.
இயற்கையே தெய்வம்.
கேரளா, கடவுளின் சொந்தநாடு.

மதுரை- 2000 ஆண்டுகளாகவே நகரம்.
வரலாற்றுச்சிறப்புமிக்கது.
தீப்பெட்டி போன்ற தங்குமிடங்கள்.
வழிகாட்ட ஆளில்லாமல் தவிக்கும் பயணிகள்.
நாயக்கர் கோட்டைக்கொத்தளம்,
மிகச்சிறப்பான பூங்காவாக வடிவமைக்கப்பட்டபின் வேலையற்றவர்களின் ஓய்விடமாகிக்கிடக்கிறது.
மலைகளில்,குகைகளில்,தெருக்களில்,
எங்கெங்கு காணினும் கொட்டிக்கிடக்கும் குப்பைகளுக்குப்பின்னே
உறைந்து கிடக்கிறது,
தமிழின்,தமிழரின் வரலாறு.
உலகெங்குமிருந்து வந்து மூச்சுத்திணறுகிறார்கள்.
மதுரை,தமிழின் சொந்தநாட
ு.

No comments:

Post a Comment