Friday 4 July 2014

எழுத்துப்பிழைகளைத்திருத்துதல்?



படித்த பெரியவர்கள், மற்றும் பல ஆசிரியர்களாலேயே எழுத்துப்பிழை இல்லாமல் எழுத இயலாத நிலையே காணப்படுகிறது.
சுயமாக எழுதும் பழக்கம் அறவே இல்லாதது போலவே தோன்றுகிறது.
மொழிப்பாடத்திலும்,
கட்டுரைகள், மாணவரின் சொந்தப்படைப்பாக இல்லாமல் ஆசிரியர் சொல்வதை அல்லது எழுதிப்போடுவதை அப்படியே நகல் செய்து மனப்பாடம் பண்ணுதலே அதிகம்.

எனது வகுப்பில்,
தொடக்கத்திலேயே சொல்லிவிடுவேன்.
'நாம் பேசும்போது எழுத்துப்பிழையோ,இலக்கணப்பிழையோ வருவதில்லை.காரணம் அதிகம் பேசிப்பழகியிருக்கிறோம்.
நாமாக எழுதியதில்லை.....'
என்று பல செய்திகளைக்கூறி சுயமாக எழுதச்சொல்வேன்.

"கற்க கசடற" என்று ஒரு பக்கம் முழுதும் கையெழுத்துப்பயிற்சி செய்வதை விடுத்து அதிலேயே அன்றாட நிகழ்வுகளை நாட்குறிப்பாக எழுதச்சொல்வேன்.
எழுத்துப்பிழைகளைத்திருத்துவது இல்லை.
தொடர்ந்த வாசிப்பும் எழுதுவதும் எழுத்துப்பிழைகளைத்தாமாகவே சரிசெய்துவிடும்.
நீண்ட நாட்களாகத்தொடர்ந்தால், சற்று கவனி. என்பேன்.

பிழைகளைத்திருத்துவதைவிட
திருந்தச்செய்வதே
ஆசிரியரின் பணி
என நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

No comments:

Post a Comment