Friday 4 July 2014

மனைவிக்கு...


தினமும் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன்.
ஓவியம்,வாசிப்பு,இணையத்தில் எழுத்து என ஏதேனும்
செய்துவிட்டு 5 மணிக்குப்பால் வந்தவுடன் சுடவைத்து,
காப்பி போட்ட பின்பே மனைவியை எழுப்புவேன்.
இட்டலி ஊற்றிவைத்து, குக்கரில் அரிசி வைத்து,
இருக்கும் பாத்திரங்களைக்கழுவி வைத்துவிட்டு என் வேலைகளைக்கவனிப்பேன்.
8 மணிக்கே பள்ளிக்குக்கிளம்பவேண்டுமென்பதால்
காலை உணவுக்குப்பின் இருக்கும் பாத்திரங்களைக்கழுவி வைப்பேன்.
இவற்றிற்கிடையில்
மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றுதல்,
தோட்டத்திற்குத்தண்ணீர் ஊற்றுதல்,
தேங்காய் உடைத்துக்கீறித்தருதல்,
சட்னி அரைத்தல்,
பிள்ளைகளின் சீருடைகளைத்தேய்த்தல்.....
மேலும்,
துணிமடித்தல்,
தோசை ஊற்றுதல்,
வீடு துடைத்தல்,
இன்னும்...இன்னும்....

என்று நான் அடுக்கிச்சொல்வதிலேயே
என் நண்பர்கள் வாய்பிளப்பர்.

எப்படி இவ்வளவு வேலைகள்?
உன் மனைவி கொடுத்துவைத்தவர்.
எங்க வீட்டுல சொல்லீராத....

உண்மையில் என் மனைவி பார்க்கும் வேலைகளில்
10 சதம் கூட நான் பார்ப்பதில்லை.


அவளே என் சக்தி.

நான் வெறும் சிவம்.

No comments:

Post a Comment