Saturday 26 July 2014

காணாமல் போன காமராசர்



ஆளில்லாத லெவல் கிராசிங்.
பள்ளிப்பிள்ளைகளுடன் ஒரு வேன் சிக்கிக்கொண்டது.எங்கோ தூரத்தில் ரயில் வந்துகொண்டிருக்கிறது. ஓட்டுனர் இறங்கி ஓடுகிறார்.
மற்றவர்கள் அனைவரும் இறங்கமுடியாமல் கதறுகின்றனர்.
ஒரு மாணவன் ஜன்னல் வழியாகக்குதித்து,
தண்டபாளத்தில் ஓடுகிறான்.அவன் பின்னால் 'அண்ணே' என்றபடியே மற்றொரு சிறுவனும் குதித்தோடி வருகிறான். மயங்கி விழுகிறான்.
ரயில் வந்துகொண்டே இருக்கிறது.
முதலில் குதித்த சிறுவன் சிவப்புக்கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கிறான். கால் சட்டையிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டியபடியே ரயிலை நோக்கி ஓடுகிறான்.
கைக்குட்டை வெள்ளையாக இருக்கிறது.
ஓடிக்கொண்டே பார்த்தவன் கண்களில், தண்டபாளத்தின் ஓரத்திலிருந்த பீர் பாட்டில் படுகிறது.
பாய்ந்தெடுத்து, ஒருகணம் யோசித்து, அதை அங்கேயே உடைத்து,கூரிய முனையால் கையைக்கிழித்து, கைக்குட்டையை இரத்தத்தில் நனைக்கிறான்.
சிவப்புக்கைக்குட்டையைப்பார்த்ததும் ரயில் நின்றுவிடுகிறது.

இப்படிச்சில அறிவுப்பூர்வமான காட்சிகளின் தொகுப்பாக 45 நிமிடங்கள் சிறார்களே பெரியவர்கள் போல வேடமிட்டு நடித்த படம் திரையிடப்பட்டது.எங்கள் பள்ளியைச்சார்ந்த 475 மாணவர்களும் 15 ஆசிரிய ஆசிரியைகளும் திரையரங்கிற்குச்சென்றிருந்தோம்.

காமராஜர் திரைப்படம் என்றுதான் சுற்றறிக்கை வந்திருந்தது.
எனது வகுப்பில் மாணவர்களுக்குப்பல்வேறு போட்டிகளைச்சொல்லியிருந்தேன். காமராஜரின் பிறந்தநாளுக்கு முதல்நாள் சென்றிருந்தோம்.
ஆனால்,காட்டப்பட்டதோ சிறுபிள்ளைகள் நடித்த, பெரியவர்களின் மூடத்தனமான கருத்துகளைச்சொல்லும் கத்துக்குட்டிப்படம்.
பாவம் மாணவர்கள்.

பல ஆண்டுகளுக்குப்பின் அரங்கு நிறைந்த காட்சிகளை அந்தப்பழமையான திரையரங்கு பார்த்திருக்கும்.

No comments:

Post a Comment