Friday 4 July 2014

பதில் தேடும் கேள்விகள்.


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 'தமிழ்த்தாத்தா உ.வே.சா' முதல் பாடம். சில செய்திகளைச்சொல்லலாமென எண்ணினேன்.
வெறுமனே தமிழ்த்தாத்தா, பழந்தமிழ் இலக்கியங்களைப்பதிப்பிக்க அரும்பாடுபட்டார் என்று சொல்வதைவிட,
இலக்கியம் என்றால் என்ன?
மொழியின் தோற்றம்,அவசியம் குறித்து கதைகளாகச்சொல்லிவிட்டு அதன்பின் பாடத்தில் வந்துள்ள செய்திகளைச்சொல்வது நலமாக இருக்குமென்பது என் எண்ணம்.
மேல் வகுப்புகளுக்கும் பயன்படும். எனவே, மாணவர்களிடம்
"இப்போ நெறைய கதை சொல்லப்போறேன், நம்மைப்பத்தி, நாம பேசுற மொழியப்பத்தி....."
கதைகள் தொடர்ந்தன.

ஒரு செய்தி சொன்னவுடன் சந்தேகமோ,கேள்வியோ இருப்பின் கைகளை உயர்த்தும்படி வருடத்தொடக்கத்திலேயே சொல்லிவிடுவேன்.
பல்வேறு கரங்கள் கேள்விகளால் உயர்ந்தன.
உலகம் எப்படித்தோன்றுச்சு?
மரம் எப்படி.....இதுபோல் பல.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான்.குரங்கு எங்கிருந்து வந்துச்சு?
இப்படியான கேள்விகளை அறிவியல் ஆசிரியரிடம் கேளுங்கள் என்றேன்.

ஒருவன் கேட்டான்,
சாமி எப்படி வந்துச்சு?
அட,இது நல்ல கேள்வி. சுருக்கமா சொன்னா,
ஆதி மனிதன் எதையெல்லாம் பார்த்துப் பயந்தானோ, வியந்தானோ அதெல்லாம் முதலில் சாமியாயிருக்கும்.
இடி,மின்னல்,மழை,நெருப்பு,...என்று தொடர்ந்தேன்.
அப்ப பேய்?
என்று தொடங்கித்தொடர்ந்தன கேள்விகள்.
சத்தம் அதிகமானவுடன்,
சரி.அவரவர் மனசுல என்னென்ன கேள்வி இருக்கோ,ஒரு தாளில் எழுதி நாளைக்கு கொண்டு வாங்க!
வகுப்பு நிறைவடைந்தது.

சிறிது நேரத்தில் என்னைத்தேடி ஒரு சிறுவன் வந்தான்.
நான்காக மடித்த காகிதத்தை என் கையில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.
அதில் மூன்று கேள்விகள்.
நாளை நான் பதில் சொல்லவேண்டும்.
அவை,

No comments:

Post a Comment