Friday 4 July 2014

29.06.2014- 18 ஆவது மணநாள்.


பணத்தைச்சேர்க்காமல் புத்தகங்களைச்சேர்ப்பவன்.
ஓவியம் எனும் பெயரில் ஏதேதோ செய்பவன்.
ஏதாவதொரு காரணம் சொல்லும் ஊர்சுற்றி.
ஞாபகமறதிக்குச்சரியான எடுத்துக்காட்டு.
விடுதிபோல் வீட்டை நினைப்பவன்.
வாசித்து வாய் கிழியப்பேசுபவன்.
வண்டி ஓட்டத்தெரியாதவன்.
எழுதுகிறேன் என்று இணையத்தில் கிறுக்குபவன்.
இன்னும் ஆட்டம் பாட்டமெனக்கவலையின்றித்திரிபவன்.

எவ்வளவு குறைசொல்ல முடியுமோ அவ்வளவும்,
யார் சொன்னாலும் அப்படியா! எனக்கேட்டு,
அப்படியே என்னிடமும் சொல்லி.....
என்னில் தான் கண்ட
குறைகளையும் நிறைகளாக ஏற்றுக்கொண்டு
17 ஆண்டுகால இல்லறத்தில் என்னை முழுமையாக்கியவள்.

அவளுக்கு நான் மூத்த பையன்.
எனக்கவள் ஒரே பெண்குழந்தை.

No comments:

Post a Comment