Saturday 21 June 2014

வாசித்தல் தவம்.




பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வுகளை கருத்திற்கொண்டு 9 ஆம்வகுப்பு மாணவர்கள் அகரவரிசைப்படி பிரிக்கப்பட்டார்கள்.
இப்போது என் வகுப்பில் 40 மாணவரில் சரளமாகத்தமிழில் வாசிக்கத்தெரிந்தவர்கள் 12 பேர். எழுத்துக்களே தெரியாதவர்கள் 2பேர்.
ாசிக்கத்தெரிந்த ஒருவனுடன் இருவர் என்று சிறு குழுக்களாகப்பிரித்து கதைப்புத்தகங்களை வாசிக்கச்சொல்லியிருக்கிறேன்.
சென்ற ஆண்டு 9 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களிடம் இரவலாக வாங்கிய புத்தகங்களும் எனது புத்தகங்களும் சேர்ந்து வகுப்பறை நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும்,
அன்றாட நிகழ்வுகளை கையெழுத்துப்பயிற்சி ஏட்டில் எழுதவேண்டும்.
கதை,
சிலரைத்தனியே இழுத்துச்சென்று மயக்குகிறது.
 

No comments:

Post a Comment