Saturday 21 June 2014

கேள்வி

சிறு வயதிலிருந்தே கேள்விகளின் மீது எனக்கு ஆசை அதிகம். அப்பா ஏதாவது சொன்னால் உடனே கேள்வி கேட்பேன்.
" சொன்னா, மொதல்ல சரின்னு கேளு. அப்புறம் கேள்வி கேளு."
என்று கோபமாகக்கத்துவார்.
சரின்னு ஒத்துக்கிட்டா அப்புறம் எப்படி கேள்வி கேக்குறது?-என்பேன்.
திட்டுகள் தொடரும்.
இது தொடர்கதை, வீட்டில்.
பள்ளியிலும் சமீபத்தில் நடந்தது.
ஆசிரியர்களுக்குள்ளேயே இந்நிலை என்றால்?
ஆசிரியர்கள், கூடி விவாதிப்பதைவிட தனித்த குழுப்பொருமல்களில் சுகம் காணுகிறார்கள்.
வகுப்பறை தவிர மற்ற நேரங்கள் தனிமையில் புத்தகங்களுடன் இனிமையாய் கழிகின்றன.
திண்ணைப்பேச்சுத்தீரர்களிடம் கவனமாய் இருக்கிறேன்.

No comments:

Post a Comment