Saturday 31 May 2014

சிகரெட் குடிகாரன்.


பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது விடுமுறைக்காலங்களில் திரைப்படங்களுக்குச்செல்லும் போது இடைவேளை நேரத்தில் சிகரெட் பிடிப்பதுண்டு. அதுவும் 'மோர்' என்ற பெயரில் பழுப்பு வண்ணத்தில் ஒல்லியாக,நீளமாக இருக்கும் அயல்நாட்டு சிகரெட். கூட்டமாக இருக்குமிடத்தில் பற்றவைப்பேன். எல்லோரின் பார்வையும் என் மேலேயே இருக்கும். அதிலொரு பெருமிதம்.
+2 க்குப்பின் ஓர் சமூக சேவை நிறுவனத்தில் பணியாற்றியபோது 'கிங்க்ஸ்' பிடிக்க ஆரம்பித்தேன்.
சிகரெட் பிடிக்கும்போது என்னிடம் இருந்த ஒரு பழக்கம், பற்ற வைத்ததிலிருந்து கடைசிவரை ஒவ்வொரு முறையும் புகையை உள்ளே இழுத்து விடுவது முதலான அனைத்தையும் நன்கு கவனிப்பது.
இது நமக்குள் என்ன மாற்றத்தைச்செய்கிறது என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ஓஷோவின் புத்தகங்களைப்படித்ததாலும் என் இயல்பாலும் வந்தபழக்கம் இது.பெரும்பாலும் என்னசெய்தாலும் 'இது என்ன செய்கிறது?' என்று கவனித்துக்கொண்டே இருப்பேன்.
அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிகரெட் பிடித்திருப்பேன்.அதன் பின் எவ்வளவு முயன்றும் முடியவில்லை.இயல்பாகவே என்னைவிட்டு எப்படிச்சென்றது என்று தெரியாமலேயே சென்றுவிட்டது.

No comments:

Post a Comment