Thursday 8 May 2014

ராஜீவ் காந்தி சாலை- நரகத்தின் வழி

           

விநாயக முருகனின் 'ராஜீவ் காந்தி சாலை' நாவல், காமம் சொல்லும் கதைகளுக்கே உரிய எதிர்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திய நாவல்.


ஒரு படைப்பாளியின்முதல் படைப்பிற்கே உரிய அனைத்து வலுவான அம்சங்களையும் உள்ளடக்கியது "ராஜீவ்காந்தி சாலை'.

ஐ.டி நிறுவனங்களின் அசுரத்தனமான வளர்ச்சி(வீக்கம்) சமூகத்தில் ஏற்படுத்தும் எல்லாவித மாற்றங்களையும் அப்பட்டமாகப் பதிவுசெய்கிறார் விநாயக முருகன்.

ஐ.டி.நிறுவனங்களின் வளர்ச்சி மனிதரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு பெரிதாக்கியிருக்கிறது? பொருளாதாரத்தைமட்டுமேவிரும்பிய  மனிதர்கள்  தன் வாழ்வில் இழந்தவை, அழிந்த கிராமங்கள், காமம் என சகல தளங்களிலும் வீரியமுடன் பயணிக்கிறது நாவல்.


 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் இன்றைய
சூழலில் காமம் குறித்து இந்திய சமுதாயம் விவாதிக்கவேண்டியதன் அவசியத்தை இந்நாவல் வலியுறுத்துவதாகவே  நினைக்கிறேன்.

எவ்வளவோ அற்புதமான காட்சிகள் நாவலெங்கும் விரவியிருந்தாலும்
அன்னம்,மீன்குழம்பு சமைத்து எடுத்துக்கொண்டு செட்டியாரைப் பார்த்துவரும் ஒரு அத்தியாயம் முதுமைக்காதலையும் வாழ்வின் தேவையையும் அழுத்தமாகப்பதிவுசெய்கிறது.

இன்றைய சமுதாயம் கட்டாயமாகப் படிக்கவேண்டிய நாவல் மட்டுமல்ல,நிறைய விவாதிக்கவும் வேண்டிய நிகழின் கண்ணாடி,'ராஜீவ்காந்தி சாலை'.

No comments:

Post a Comment