Tuesday 27 May 2014

பிள்ளை வளர்த்தல்


விடுமுறையின்போது பள்ளியில் மாணவர் சேர்க்கைப்பணிக்காகச்சென்றிருந்தேன். அரசுப்பள்ளித்தலைமையாசிரியராகப் பணிபுரியும் ஒரு அம்மையார் வந்திருந்தார்.
வாங்கம்மா.எப்படி இருக்கீங்க? என்ன,இந்தப்பக்கம்?
என் பையனுக்கு டி.சி வாங்க வந்தேன்.அவன் இங்கதான் +2 படிச்சான்.
அப்படியா! எனக்குத்தெரியாதே! பரவால்லையே, மெட்ரிக்ல சேக்காம இங்க சேத்திருக்கீங்களே!
நீ,வேறப்பா, +1 அந்தப்பள்ளிகொடத்துல படிச்சான், ரெம்ப படிக்கச்சொல்லி ஸ்ட்ரிட்டா இருக்காங்கண்ணு போக மாட்டேன்னுட்டான் வந்து +2 ல சேத்தேன்.
எவ்வளவு மார்க்?
கம்மிதான்.
தம்பி என்ன பண்ணப்போற?
..........காலேஜ்.
அந்த காலேஜ் சரியில்லேன்னு சொல்றாங்களே... என்ன........,காதுல தோடு,டி சர்ட், ஜீன்ஸ் அப்படின்னு இஷ்டம்போல திரியலாம்..
அதுக்குத்தான் தம்பி அந்தக் காலேஜ் போறேன்னு அடம் பிடிக்கிறான், எங்க சொல்றத கேக்குறான்.
அந்த அம்மையார் வெகு சாதாரணமாகச் சொல்லிச்சென்றார்.
1௦ ஆம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளிவந்த மறுநாள் காலை, பால் போடும் பையனிடம் கேட்டேன்,
தம்பி, எவ்வளவு மார்க்?
437 சார்.
இந்தப்பையனின் தந்தை கண்பார்வையற்றவர்,சுயதொழில் செய்பவர்.
தனது உழைப்பில் படிக்கிறான்.
பிள்ளைகள் கேட்பதையெல்லாம் கொடுப்பதல்ல பெற்றோரின் வேலை.அவை வந்த வழி_வலியையும் சொல்லித்தர வேண்டும்.

No comments:

Post a Comment