Tuesday 6 May 2014

மதுரை... ஒரு பாடம்.


மதுரை... ஒரு பாடம்.
  7 ஆம் வகுப்பிற்கு மதுரை மாநகரைப்பற்றியபாடம்.
மதுரையில் இருந்துகொண்டு ஏன் பாடத்தை வகுப்பறைக்குள்ளே மட்டும் படிக்கவேண்டும்?
மாணவர்களை நகருக்குள் அழைத்துச்செல்ல முடிவெடுத்தோம்.
முன்தயாரிப்பாக,
மதுரை பற்றிய ஆவணப்படம் காட்டப்பட்டது.


மதுரை நகர் பற்றிப் பாடம் கூறும் கருத்துக்களை குழுக்களாகப் பிரிந்து விவாதித்த மாணவர்கள் குறு நாடகங்களாக நடித்துக்காட்டினர்.
தமிழாசிரியர்களுடன் சில பயிற்சியாசிரியர்களும் துணைவர மாணவர்கள் இருவர் இருவராக நடக்கத்தொடங்கினர்.
மதுரைக்கோட்டையின் கிழக்கு நுழைவாயில்.
முனியாண்டி கோவில்
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்,
வடம்போக்கித்தெருக்கள்
புதுமண்டபம்
நகரா மண்டபம்
விட்டவாசல்
தேர்








நகரின் முதல் காவல் நிலையம்
விளக்குத்தூண்
பத்து தூண்கள்
வழியே நடந்து திருமலை நாயக்கர் மகாலை அடைந்தோம்.
ஒவ்வோரிடத்திலும் அதுகுறித்த வரலாறு சொல்லப்பட்டது.
மகாலில்,
வினாடிவினா, ஓவியம்,பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
அங்கிருந்து பேருந்தில் பள்ளி திரும்பினோம்.

மகாலின் பெருமைமிகு தூண்களில் படித்தவர்களே பெரும்பாலும் தங்களின் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்துகின்றனர்.
பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப்பாழ்படுத்துவோரைக்கண்டிக்க என்ன செய்யலாம்?
சேட்டைக்காரர்கள் எனப்பெயரெடுத்த சில மாணவர்களை அழைத்து,
யாரேனும் தூண்களில் கிறுக்கினால் சுற்றிநின்று 'தூணில் கிறுக்காதீர்கள்,பாரம்பரியத்தை அவமதிக்காதீர்கள்' என்று உரக்கச் சத்தமிடுமாறு கூறினோம்.
பள்ளி திரும்பும்வரை அம்மாணவர்கள் மகாலின் தூண்களைப் பாதுகாத்தது மறக்கவியலா நினைவு.

No comments:

Post a Comment