Sunday 12 August 2012

சாதி நமதொழிய வேறில்லை


பள்ளிகளில் சாதி இருக்கிறதா?
கேட்டவுடன் சிரிக்கவைக்கும் அபத்தமான கேள்வியாகத் தோன்றுகிறது.
பள்ளியில் சேர்ந்தது முதல் நேற்று வரை வருகைப்பதிவேடு,தேர்வு முடிவுகள், விலையில்லா செருப்பிற்காக அளவு எடுத்தது முடிய அனைத்து இடங்களிலும்  சாதிபிரிவு கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இட ஒதுக்கீடு ஏன்? என்பது அனைவராலும் மறக்கப்பட்டு கேலிக்கூத்தாகிவிட்டது.

ஒவ்வொரு சாதிக்கும் சங்கங்கள்,விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அல்லது அரசனாக இருந்திருந்தால் அவரே அச்சாதியின் அடையாளம்.  சாதித்தவர்கள் எல்லாம் சாதித் தலைவர்களாகிப் போனார்கள்.அவைகளின் வார்த்தைகள் மறக்கப் பட்டு சிலைகளே அடையாளங்களாகி நிரந்தரமாய் கம்பிக் கூண்டுக்குள் அடைபட்டு விட்டார்கள்.
சட்டைப் பையில்,பர்சில்,வீட்டில்- எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டனர்.என் சாதி! என மார்தட்டும் மனிதரில் எத்தனை பேருக்கு அவர் வாழ்க்கை வரலாறாவது தெரியும்?
அவர்கள் பிறந்த,நினைவு நாட்களில் பொது மக்களிடையே கலவர பயம் ஏற்படுத்தப்படுகிறது.

என் சாதியே உயர்ந்தது எனக் கூவும் சங்கங்கள் இட ஒதுக்கீட்டில் இறுதியையே விழைகின்றன.

பள்ளியில்....................?
சுவர்களில் ஆசிரியர்,நடிகர்,நண்பன்,எதிரி எனக் கிறுக்குவதுடன் சாதித் தலைவர்களின் பெயர்களும் இணைந்துள்ளது.
காமராசர் பிறந்த நாள் போட்டிகள் - நாடார் பள்ளிகள், வீரமா முனிக்கு கிறித்தவப் பள்ளி, இவை தவிர பள்ளிப் பெயரிலேயே சாதி.

ஆசிரியர்களிடையே அப்பட்டமாகவே சாதி.

 பெரியார் கூட அவர் பிறந்த சாதிக்கு அடையாளமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வகுப்பறைக்குள் மாற்றம் வருமென நம்புகிறேன்.
கானல் போல் தோன்றினாலும்
நம்பிக்கை தானே வாழ்க்கை.

No comments:

Post a Comment