Saturday 18 August 2012

விருது வாங்குதல்


"மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்
குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர் சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர்.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது,""சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன.
வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,'' என்றார்.

தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு
செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்."

                                                                                                                   - பத்திரிக்கை செய்தி.

இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான முயற்சிகள் தீவிரமடைந்து ஏறத்தாழ முடிவுகள் உறுதி ஆகியிருக்கும்.மேற்கண்ட செய்தி நல்லாசிரியருக்கான தகுதிகளை கூறுகிறது.முதல் தகுதியே பணிமூப்பு.

ஓய்வுபெறும்போது நல்லாசிரியர் என்று பாராட்டி விருது வழங்குவது அந்த ஆசிரியரின் முயற்சிக்கு வெகுமதி.
பெரும்பாலும் ஓய்வு பெறவுள்ள தலைமையசிரியர்களே மாநில,மத்திய விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
வலிமையான பின்னணி இருந்தால் மட்டுமே தற்போது பணியிலிருப்பவர்கள் விருது வாங்குகின்றனர்.சில நேரங்களில் ஆள் கிடைக்காவிட்டால் யாராவது ஒரு ஆசிரியருக்கு விருது யோகம்.

தற்போது பெருமைக்காக,பெயருடன் சேர்த்துக் கொள்ள மட்டுமே விருதுகள். விருது பெற்றவர்கள் பெரும்பாலும் பள்ளியில் பணிசெய்வதைவிட' பிற' பணிகளைச் செய்பவர்கள்.பெரும் விபத்துக்களை சந்தித்த 'பள்ளிகளை' தொடங்கியவர்கள் விருது வாங்கிய ஆசிரியர்களே.

  இப்போது சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கினால் ,விருது பெற்றுவிட்டோம் என்ற உணர்வே அவர் பணியை  மேலும் சிறப்பாக மாற்றும்.
ஓய்வு பெறப்போகும் ஆசிரியருக்கு ஒன்றும் இளம் ஆசிரியருக்கு ஒன்றுமாக இரு விருதுகள் வழங்கலாம்.
எப்படியானாலும் விருது வாங்க விரும்பும் ஆசிரியருக்கே விருது கிடைக்கும்.
என்னதான் செய்வது?
ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்பவருக்குத்   தெரியும் ,

'தகுதியான விருதுகள்  மாணவர்களாலேயே வழங்கப்படுகின்றன'.

No comments:

Post a Comment