Monday 13 August 2012

உரை வளர்த்த தமிழர்


சென்ற ஆண்டு தமிழாசிரியர்களுக்கான பயிற்சியில் ஒரு மூத்த தமிழ் கூறினார்,
'இரண்டாம் தாளில் கவிதை எழுது என்று ஒரு கேள்வி வருது.நட்பு,மழை, அப்படின்னு கேக்கறாங்க.
கோனார் உரைல இந்த எல்லா தலைப்புலயும் ஈசியா போட்டிருக்காங்க.பசங்கள வாங்கி படிக்க சொல்லுங்க.நல்ல மார்க் எடுக்கலாம்.'

எனக்கு கடுமையான கோபம் வந்தது. மொழிப்பாடம் வெறும் மனப்பாடமா?
 என் முதல் வகுப்பிலேயே மாணவர்களிடம் கூறுவேன்,
'யாரிடமாவது தமிழ் உரை ஏதாவது பார்த்தேன்னா அப்பவே வாங்கி கிழித்துப் போட்டிருவேன்'.
புத்தகத்தை விட  பெரியதாகவும் விலை அதிகமாகவுமே உரைகள் விற்கப்படுகின்றன.ஆசிரியர்களே உரை எழுதுகிறார்கள்.
கடினமான நடை.சாணித் தாள்.சிறிய எழுத்துக்கள். இருந்தாலென்ன? உரை வாங்கிப் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்பது  பொது நம்பிக்கை.பல ஆசிரியர்களே உரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.
சமச்சீர் கல்வியில் தமிழ் புத்தகங்களில் செய்யுள் பாடம் உரையுடனே அச்சிடப்பட்டுள்ளது.முப்பருவக் கல்வி முறையால் புத்தகம் மூன்றானது போலவே உரையும் மூன்றாகிவிட்டது.புரிதல்  இல்லாத மனப்பாடக்  கல்வியும் அதிக மதிப்பெண் பெறுவதே அறிவு ,அதிகப் பணம் தரும் வேலை என்ற கானல் நீர்களின் பின்னால் அலைகின்றனர் மக்கள்.
முப்பருவக் கல்விமுறையில் செயல்வழிக் கற்றல் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் சில ஆசிரியர்களை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது.மாணவர் கைகளில் கல்வி மாறும் காலம் வரும்.

No comments:

Post a Comment