Tuesday 14 August 2012

சுதந்திரமா சுதந்திரம் .........


வருடம்தோறும் வருகிறது சுதந்திர தினம்.
சுதந்திரத்திற்கான  மகிழ்ச்சி விடுமுறையால்.
வழக்கம்  போல் ஏதாவது தொலைக்கட்சியில் சுதந்திரம் என்றால் என்ன? என்று சிக்கியவர்களிடம் கேட்பார்கள்.அவர்களும் கேணத்தனமான பதிலை சிரித்துக்கொண்டே சொல்வார்கள்.
சிறப்புப் பேட்டிகளில் 'தல'களும் தளபதிகளும் சுதந்திரம் பெற்ற வீர வரலாற்றைக் கூறுவார்கள்.
சிறு வயதுமுதல் சுதந்திரத்தை கொண்டாடிய விதத்தை நமீதாக்கள் குழற நாமும் வாய் குழைந்து ரசிக்கலாம்.
சிறப்பு  திரைப்படங்களை பேரண்டத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாகப்  பார்க்கலாம்.
மதிய உணவிற்குப்பின் படுத்துத் தூங்கலாம்.
மான்களும் மயில்களும் சுதந்திரமாக குத்தாட்டம் போடுவதை கண்டு குடும்ப கெமிஸ்ட்ரியுடன் குதூகலிக்கலாம்.
சுதந்திரம் யாருக்கு? என்று மாமியார் - மருமகள், பெற்றோர் - பிள்ளைகள், குடிப்பவர் - குடிக்காதோர் என்று  சமுதாயத்தின் இரு முக்கிய பிரிவினர் நீயா நானா என வாய் வாதம் செய்வதுடன்  நாமும்  வாதம் செய்யலாம்.

பாவம் ஆசிரியர்கள் அனைத்து  முக்கிய நிகழ்வுகளையும் சிறிது தியாகம் செய்துவிட்டு பள்ளிக்கு கொடியேற்றும் நிகழ்விற்காகச் செல்லவேண்டும்.மகிழ்ச்சியாக ஆறாம் வகுப்பு மாணவர்களும் கட்டாயத்தின் பேரில் மற்ற சிலரும் வருவார்கள்.இப்போதெல்லாம்  பசையுடன் கொடி இருக்கிறது.சட்டையில் ஒட்டிக்கொள்வது சுலபம்  என்றாலும் கறை படிந்துவிடும்,போகாது.நெஞ்சில் குத்திவிடாமல் குண்டூசியால் குத்திக்கொள்வதே  நல்லது.

இவ்வாறான முன்னேற்றங்கள் எதையும் அறியாமல் மிச்சமிருக்கும் ஒரு சில வயதானவர்கள் காந்தி குல்லாவுடன் நேதாஜி சிலை முன் குரலில் மட்டும் நடுக்கத்துடன்  'வந்தே மாதரம்' என்று கர்ஜிப்பார்கள்.
அவர்களின் உள்ளங்களில் மறைந்திருக்கும், அவர்கள் பெற்ற  நம் நாட்டின்  எதிர்காலம்.

No comments:

Post a Comment