Sunday 5 August 2012

கேள்வி விடைகள் 2

மரணம் தழுவிய உடல்
மலரைப்போல மிதக்கிறது.
அதன் ஒவ்வொரு அணுவிலும்
வாழ்க்கை ததும்பி வழிகிறது.
அருகே புன்னகையுடன் அமர்ந்திருக்கிறான்
மரணதேவன்.
மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்
வாழ்வின் ரகசியங்களை.
அவன் மொழி புரியாமல்
ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
நான் அவனை.
அவன் என்னை.
புரியவில்லை என்றேன் மெதுவாக.
உணர் என்றான் புன்னகையுடன்.
புரிந்தது போலும்
புரியாதது போலும் இருக்கிறது
வாழ்க்கை.

1 comment:

  1. sir is it ur own lyrics?.....superb sir.. what s life? it explains that...

    ReplyDelete